2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வரையறுக்கப்பட்ட கப்பற் கூட்டுத் தாபனத்திற்கும் பாகிஸ்தான் தேசிய கப்பற் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை - இருநாடுகளினதும் அங்கீகாரத்தின் பிரகாரம் இருநாட்டு கொடிகளைக் கொண்ட கப்பற் கம்பனிகள் இரண்டிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதன் மூலம் குறித்த இரண்டு நிறுவனங்களுக்குமிடையில் பரஸ்பர ஒத்துழைப்பினை உறுதி செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது. ஆதலால், அதிமேதகைய சனாதிபதி அவர்களின் பாகிஸ்தான் விஜயத்தின் போது மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |