• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தண்டனைச் சட்டக்கோவைக்கு செய்யப்படும் திருத்தங்கள்

- இலங்கை அனுபவித்த ஆயுத மோதல்களை மீள நோக்கி, அந்த அனுபவங்களின் ஊடாக எதிர்கால நடவடிக்கைகளுடன் சென்று குறித்த பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளைச் செய்து சமாதானத்தை கட்டியெழுப்பும் யுகமொன்றை ஏற்படுத்துவதனை உறுதிப்படுத்தும் பொருட்டு கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டதோடு, கடந்த நான்கு தசாப்தகாலமாக அல்லது ஐந்து தசாப்தகாலமாக நிலவிய "வைராக்கியத்தை ஏற்படுத்தும் தன்மையிலான கருத்துக்களைத் தெரிவித்தல்" இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மைக்கு பங்களிப்பு நல்கியுள்ள சந்தர்ப்பங்கள் ஆணைக்குழுவினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதலால், இனம் மற்றும் மதம் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய வைராக்கியத்தை ஏற்படுத்தும் கூற்றுகள் இன, மத எதிர்ப்புத்தன்மையை மேம்படுத்துகின்றமையினால் இத்தகைய நிலைமைகளை தவிர்ப்பதற்கு சட்டங்களை ஆக்க வேண்டுமெனவும் இந்த சட்டங்கள் கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் ஆணைக்குழுவானது சிபாரிசு செய்துள்ளது. இதற்கமைவாக, மத மற்றும் இன எதிர்ச் செயற்பாடுகளை தூண்டும் விதத்திலான கருத்துத் தெரிவிப்புகளை தடைசெய்வதற்கும் அவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகளை தண்டனைச் சட்டக்கோவையில் உள்வாங்கி சட்டவரைநரினால் வரையப்பட்ட திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அங்கீகாரத்தின் பொருட்டு இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.