2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பச்சை தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 80/= - 90/= ரூபாவுக்கு இடைப்பட்ட உத்தரவாத விலையொன்றைப் பேணுதல் - சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ பச்சைத் தேயிலைக் கொழுந்தினை 80/- ரூபா என்னும் உத்தரவாத விலைமுறையினைப் பேணுவது அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் பிரேரிப்பொன்றாகும் என்பதோடு, நிதி அமைச்சர் 2015‑01‑29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால வரவுசெலவுத்திட்ட அட்டவணையிலும் கூட இந்தப் பிரேரிப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ பச்சைத் தேயிலைக் கொழுந்தினை 80/- ரூபா என்னும் உத்தரவாத விலையை வழங்குவதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |