• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வெசாக் பண்டிகை - 2015

- இம்முறை அரசாங்க வெசாக் பண்டிகையை பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை புண்ணிய பூமியில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இந்தப் பண்டிகை்கு ஒருங்கிணைவாக நடாத்தப்படும் தெரிவு செய்யப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தனியார் துறையின் அனுசரணை / பங்களிப்பு பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை அரசாங்க வெசாக் பண்டிகையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி ஏற்பாட்டினை குறித்தொதுக்கிக் கொள்வதற்காக புத்தசாசன அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.