2015-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீண்டகால சிறுநீரக நோய் நிலைமையை கண்டறிதலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நீர் சுத்திகரித்தலும் - இலங்கையில் வட மத்திய, வடமேல், ஊவா, மத்திய, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் நோய்க் காரணி திட்டவட்டமாகக் கண்டறியப்படாத நீண்டகால சீறுநீரகநோய் பரவி வருகின்றதோடு, பெரும்பாலும் குடிநீரிலுள்ள விசேடமான நிலக்கீழ் நீர் இரசாயன ஆக்கக்கூறுகளின் சேர்க்கை இந்த நோய் உருவாவதற்கு காரணமாய் இருக்கலாமென கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு சீன விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |