2015-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஊடகத்துறைக்கு உரிய ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையில் தகவல் பரிமாற்றல் பற்றிய துறையில் சருவதேச ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில் 2015‑03‑24 ஆம் திகதியன்று கட்டார் இராச்சியத்தின் சீக் தமீம் இன் ஹமாத் அல்தான் மன்னரின் விஜயத்திற்கு ஒருங்கிணைவாக மேற்போந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடு வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் மாண்புமிகு கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |