2015-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிராமிய வீதி மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டம் - 2015 - இலங்கையில் 160 தேர்தல் தொகுதிகளையும் தழுவும் விதத்தில் நாட்டின் கிராமிய வீதிகளை புனரமைப்பதற்கும் விருத்தி செய்வதற்குமான கருத்திட்டப் பிரேரிப்பொன்று நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு கூடுதலான பங்களிப்பினைச் செய்யும் கிராமிய வீதிகளை விருத்தி செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கைநிலையை மேம்படுத்துவது இந்தக் கருத்திட்டத்தின் நோக்கமாகும். உரிய பிரதேசங்களில் சமூக அமைப்புகளின் ஊடாக கிராமிய மட்டத்தில் இனங்காணப்பட்ட வீதி அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதன் மூலம் அபிவிருத்திப் பணிகளில் பங்களிப்பு நல்குவதற்கு குறித்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோன்று மூலப்பொருட்கள் வழங்குதல், கொங்கிறீற் கல் உற்பத்தி என்பனவற்றின் மூலம் கிராம மட்டத்தில் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹாஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |