• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கண்டி நீர் வழங்கல் கருத்திட்டம்

- பாரிய கண்டி நீர் வழங்கல் கருத்திட்டத்தின் கட்டம் I படிநிலை II சார்பில் யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் நிதியளிக்கப்படுவதோடு, பாரிய கண்டிப் பிரதேசத்தில் குழாய் நீருக்காக நிலவும் கேள்வியை பூர்த்தி செய்யும் பொருட்டு இது செயற்படுத்தப்படுகின்றது. இந்த கட்டம் I படிநிலை II சார்பில் சேவைகள் நீர்த்தேக்கம், பம்பு நிலையம், உத்தியோகபூர்வ இல்லம், அனுப்பீட்டு மற்றும் விநியோக வழிகளின் நிருமாணிப்பு, வழி மீள் நிருமாணிப்பு என்பன உள்ளடங்கும். அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வேலைவிடய நோக்கெல்லை காரணமாக கருத்திட்டத்தின் செலவு அதிகரித்துள்ளமையினால் செலவு மதிப்பீட்டுக் குழுவினதும் அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் மொத்த செலவு மதிப்பீட்டைத் திருத்துவதற்கும் கருத்திட்டம் பூர்த்தி செய்யப்பட வேண்டிய திகதியை 2015‑06‑20 ஆம் திகதி வரை நீடிப்பதற்காகவும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.