• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையில் இளைஞர் அபிவிருத்திக்குரியதாக கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை

- இலங்கையின் இளைஞர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கும் கட்டார் இராச்சியத்தின் இளைஞர் அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சுக்குமிடையில் மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் முக்கியமாக பின்வரும் துறைகள் தழுவப்படும்:

* இருநாடுகளுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தி கொள்கைகளுக்குரிய பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர் அமைப்புகள், இந்தத் துறையில் தேர்ச்சிபெற்றோர் உட்பட நிபுணர்களுக்கும் ஏற்புடையதாக நாடுகள் இரண்டிற்கும் இடையில் தொடர்புகளை மேம்படுத்துதல்.

* இளைஞர்களுக்கான பௌதிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அதேபோன்று இதற்குச் சமமான முக்கியத்துவமுடைய தகவல்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ளல்.

* இளைஞர்களின் பிரச்சினைகளுக்குரிய தகவல்கள் தொடர்பிலான கருத்துக்களை பரிமாறிக் கொண்டு துறைசார்ந்த ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் இருதரப்புக்கும் இடையில் ஒத்துழைப்பினை மேம்படுத்துதல்.

* இளைஞர் விளையாட்டு, கலாசார பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள், இளைஞர் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை இருநாடுகளுக்குமிடையில் விரிவாக நடைமுறைப்படுத்துதல்.

* தொழிலற்ற இளைஞர் சமுதாயத்திற்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்குரிய தகவல்களை பரிமாறிக் கொள்தலும் ஒத்துழைப்பினை மேம்படுத்துதலும்.

* இளைஞர் அபிவிருத்திக்குரியதாக இருதரப்பினராலும் உடன்படும் துறைகள் சம்பந்தமான ஒத்துழைப்பினை விருத்தி செய்தல்.