2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளல் பற்றிய விசேட சனாதிபதி செயலணி - இலங்கையர்களினாலும் வேறு ஆட்களினாலும் இலங்கையர்கள் சார்பில் செயலாற்றியோ அல்லது வேறு விதத்திலோ சட்டவிரோதமாக சுவீகரித்துக் கொண்டு அல்லது பெற்றுக் கொண்டு இலங்கைக்கு வெளியே பதுக்கிவைத்துள்ள அல்லது வைத்துக் கொண்டுள்ள இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கவேண்டிய சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் பற்றி புலனாய்வு செய்து அவற்றை இனங்காணுதல், ஆராய்தல் உட்பட அவற்றை கைப்பற்றுதல் போன்றவை சார்பில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்தல் அதேபோன்று இந்த சொத்துக்களை பொதுத் திறைசேரிக்கு கையளிப்பதற்காக இலங்கைக்கு உடைமையாக்குவதற்காக அரசாங்க சொத்துக்களை மீள பெற்றுக் கொள்ளல் பற்றிய விசேட சனாதிபதி செயலணியொன்றைத் தாபிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |