2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதையின் மேற்பரப்பிடல் உட்பட அது சார்ந்த வேலைகள் சம்பந்தமான ஒப்பந்தம் - மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குதலானது போட்டி கேள்வி செயல்முறையை பின்பற்றாமலும் தெளிவான தன்மை இல்லாமலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளமையினால், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மேற்போந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்யும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |