2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அக்குரேகொட பாதுகாப்புத் தலைமையகக் கட்டடத் தொகுதி நிருமாணக் கருத்திட்டம் - நிருமாணிப்பு பணிகளுக்கு பாரிய அளவில் செலவுகளை ஏற்பதற்காக மதிப்பிடப்பட்டிருந்த இந்த கருத்திட்டத்தின் முழு விடயநோக்கெல்லை, மொத்த செலவு, நடைமுறைப்படுத்தும் கால இலக்கு, மதியுரை கம்பனிகளுக்கு மதியுரைக்கான ஒப்பந்தம் வழங்குதல் அடங்கலாக இந்தக் கருத்திட்டத்தின் பணிகளுக்குரிய ஏனைய விடயங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு ஒரு (01) மாத காலத்திற்குள் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சு, நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு, கட்டடங்கள் திணைக்களம், கணக்காய்வாளர் திணைக்களம் போன்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்தக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |