• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரக் கொள்வனவு - 2015

- அரசாங்கத்தினால் வழங்கப்படும் உரமானியத் திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டமானது நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் அமைச்சின் கீழுள்ள வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி (லக் பொஹர), வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி (கொமர்ஷல் பொஹர) என்பனவற்றினால் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப் பட்டுள்ளவாறு இந்த சிறுபோகத்தில் மே மாதத்திற்கான வழங்குகைக்குத் தேவையான உரக் கொள்வனவின் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.