• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆயளவை தகவல்களைக் கொண்ட இலங்கை வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களை வழங்குவதற்காக குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தை திருத்துதல்

- கடவுச் சீட்டுக்களை வழங்கும் அத்துடன் புதுப்பிக்கும் பணிகள் கையளிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு இந்த கடவுச் சீட்டுக்களை வழங்கும் போது விண்ணப்பதாரர்களின் கைவிரல் அடையாளத்தை பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தை திருத்துவதற்காக சட்டவரைநரினால் வரையப்பட்ட திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தின் பொருட்டு சமரப்பிப்பதற்காக மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமை மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.