• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

- அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்கும் இதன் ஊடாக பயனுள்ள அனர்த்த முகாமைத்துவ முறையொன்றை உருவாக்கும் நோக்குடன் வரையப்பட்ட மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமை மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் பின்வரும் துறைகளில் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைப்புடன் செயலாற்றும்:

* புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் சமூக பாதுகாப்பு .

* சமூக அனர்த்தங்களை குறைக்கும் பொருட்டு தன்னார்வ அடிப்படையிலான முன் அபாய எச்சரிக்கை முறைமையொன்றை சமூக மட்டத்தில் தாபித்தல்.

* வெள்ளப்பெருக்குக்கு ஆளாகும் பிரதேசங்களிலும் மண்சரிவு மற்றும் மண் அரிப்பு ஆளாவதற்கு சாத்தியமுள்ள ஈரவலய பிரதேசங்களின் அபிவிருத்தி பணிகளை ஒழுங்குறுத்துவதற்கான சட்டங்களை ஆக்குதல்.

* வெள்ளப்பெருக்கு முகாமைத்துவத்தின் பொருட்டு பங்களிப்பு அணுகுமுறைக்கான வழிகாட்டல்.

* வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு தொடர்பில் முன் எச்சரிக்கை முறைமைகளைத் தாபித்தல்.

* பயனுள்ள அனர்த்த நிவாரண சேவைகள்.