• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டமூலம்
- பிரசைகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையை உறுதி செய்வதன் மூலம் நாட்டில் சனநாயக மற்றும் நல்லாட்சி மூல தத்துவங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் ஊடாக ஊழலற்ற ஒழுக்கம் மிக்க சமூகமொன்றை இலங்கையில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதற்குத் தேவையான சட்டங்களைத் தயாரிப்பதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான ஆணைக்குழு வொன்றை நியமிப்பதற்குரியதான தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கமைவாக தகவல் அறியும் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக வெகுசன ஊடக, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சும் அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சும் நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சும் இணைந்து ஊடகவியலாளர்கள், சட்டதுறைசார்ந்த நிபுணர்கள், அரசசார்பற்ற அமைப்பு பிரதிநிதிகள், அரசாங்கதுறை சார்ந்த உத்தியோகத்தர்கள் ஆகியோர்களின் கருத்துக்களை கவனத்திற் கொண்டு இது தொடர்பிலான குழுவினால் சட்டமூலத்திற்கு அடிப்படை ஆவணமொன்றைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இந்த அடிப்படை ஆவணத்தையும் பரிசீலித்து சட்டத்தினை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு வெகுசன ஊடக, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.