2015-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இந்தி அரசாங்கத்திற்கும் இடையில் இளைஞர் அபிவிருத்திக்குரியதாக கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க் கப்பட்டுள்ள உடன்படிக்கை - இலங்கையின் இளைஞர் விவாகர இராஜாங்க அமைச்சுக்கும் இந்தியாவின் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கங்களாவன இருதரப்புக்கும் இடையில் அறிவு, அனுபவம் உட்பட வளங்களை பகிர்ந்து கொள்வதும் இளைஞர் அபிவிருத்தி சம்பந்தமாக இருநாடுகளுக்குமிடையில் நீண்டகால ஒத்துழைப்பபை மேம்படுத்திக் கொள்வதுமாகும். இதற்காக இளைஞர் தலைமைத்துவ மற்றும் ஆளுமை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், இளைஞர் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள், இளைஞர் கலாசார பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள், இளைய தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் முதலிய துறைகளில் ஒத்துழைப்பு உள்ளடங்கும். இதற்கமைவாக மேற்போந்த உடன்படிக்கையை செய்துகொள்ளும் பொருட்டு கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |