• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- இயைபுள்ள நிறுவனங்களின் முறையான அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படாமல் கருத்திட்டத்தின் பணிகளை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை தெரியவருகின்றமை இந்த கருத்திட்டம் பற்றி மீளாய்வு செய்து சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் பொருளாதார கொள்கை பற்றிய அமைச்சரவை உபகுழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக கருத்திட்டத்தின் வேலைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இயைபுள்ள நிறுவனங் களிடமிருந்து பெறப்பட்டுள்ள அங்கீகாரங்களை இரண்டு (02) வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கருத்திட்ட கம்பனிக்கு அறிவிப்பதற்குமாக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.