2015-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்கத்தின் துரித 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டம் - அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் தருநர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பின் மீது புலம்பெயர் தொழிலாளர்கள் சார்பில் சமூக பாதுகாப்பு நிதியமொன்றைத் தாபிப்பதற்கும் அதன் கீழ் பாரிய எச்சரிக்கையுடன் சேவை புரியும் வீட்டுத் தொழிலாளர்கள், பயிற்சி பெறாத தொழிலாளர்கள் அடங்கலாக சகல புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் சலுகை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. பிரேரிக்கப்பட்டுள்ள இந்த ஓய்வூதியத் திட்டத்தை திட்டமிடும் பொருட்டும் இதற்கான வழிமுறை சம்பந்தமான பிரேரிப்புகளை சமர்ப்பிப்பதற்குமாக அரசாங்க உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராண்மைகளின் பிரதிநிதிகள், "ரட்டவிருவோ" அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட உரிய தரப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மாண்புமிகு (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |