• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
றுஹுணு பல்கலைக்கழகத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய கலையரங்கம் மற்றும் கேட்போர்கூடத்தினை நிருமாணிப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் சிறு அபிவிருத்திச் செயல் திட்டங்களுக்கான உதவித் திட்டத்தின் ஊடாக அனுசரணை வழங்குதல்
- சுமார் 7,320 பட்டபடிப்புக்கான அபேட்சகர்கள் கல்வி கற்கும் 46 பாடநெறிப் பிரிவுகளைக் கொண்ட றுஹுணு பல்கலைக்கழத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய 1,500 இருக்கைகளைக் கொண்ட கலையரங்கம் ஒன்றையும் கேட்போர் கூடமொன்றையும் நிருமாணிக்கும் பொருட்டு மதிப்பிடப்பட்டுள்ள 336 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையில் 300 மில்லியன் ரூபாவை கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹாஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.