2015-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிருமாணிக்கப்பட்ட பெண்கள் தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை வசதிகளை வழங்கும் கருத்திட்டத்திற்கும் சமூக கல்வி நிலையத்தை நடாத்திச் செல்வதற்கும் இந்திய அரசாங்கத் துடனான புரிந்துணர்வு உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் - இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றின் மீது 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மேற்போந்த கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறுபட்ட தொழில்முயற்சி அபிவிருத்தி பாடநெறிகள் செயற்படுத்தப்பட்டு இந்த பெண்களை பொருளாதார சமூக ரீதியில் பலப்படுத்தும் இந்தக் கருத்திட்டத்தின் கால எல்லையை 2016 யூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கும் பொருட்டு மகளிர் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |