• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000/= ரூபா பெறுமதிமிக்க போசாக்கு உணவினை வழங்குதல்
- அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மேற்போந்த நிகழ்ச்சித்திட்டம் 2015 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு "ஆரோக்கியமான தாய்மார் நிகழ்ச்சித்திட்டம்" என 2015 மார்ச் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப் படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக,

* அரசாங்க மகப்பேறு கிளினிக்குகளில் பதிவு செய்து உரிய முறையில் இந்தக் கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவருக்கும் மருத்துவ சிபாரிசின் மீது பிரேரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு உரியதாகும்.

* கர்ப்பமுற்றிருக்கும் இறுதி ஆறு (06) மாத காலம் அத்துடன் பிள்ளைப் பேற்றின் பின்னர் வரும் முதல் நான்கு மாதங்கள் அடங்கலாக பத்து மாத காலத்திற்கு தவணையொன்று 2,000/- ரூபா வீதமாக அமைந்த 10 தவணை களாக இந்த கொடுப்பனவின் கீழ் போஷாக்கு மிக்க உணவு வழங்கப்படும்.

* சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மாவட்டச் செயலாளர்களின் / அரசாங்க அதிபர்களின் மேற்பார்வையின் கீழ் பிரதேச செயலாளர்களினால் மகப்பேறு கிளினிக்குகளில் சேவையாற்றும் மருத்துவர்களின் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.