2015-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உலர்வலய விவசாயிகளின் கம உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவதனை இலகுபடுத்துவதற்கும் களஞ்சியப்படுத்தியுள்ள உற்பத்தி இருப்புகளை பிணையாக வைத்து கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிதியிடல் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் - உலர் வலய விவசாயிகளின் உற்பத்திகளுக்கு உயர் தரத்திலான களஞ்சிய வசதிகளை வழங்குவதன் மூலம் அறுவடை செய்யப்படும் காலத்தில் விற்பனை செய்து பெற்றுக் கொள்ளக் கூடிய வருமானத்தினை விட கூடிய வருமானத்தையும் இலாபத்தையும் குறைவாக கிடைக்கப் பெறும் காலங்களில் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு புதிய பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கும் அதற்காக விவசாயிகளுக்கு நிதி வசதிகளை வழங்குவதற்கும் உலக வங்கியின் கொடை யொன்றின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிதியிடல் கருத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் அநுராதபுரம்,மொனராகலை, மன்னார் மாவட்டங்களில் களஞ்சியங்களின் நிருமாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம் மாவட்டத்தில் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவில் நிருமாணிக்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான முதலாவது களஞ்சியசாலையின் நிருமாணிப்புப் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதோடு, அதன் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் முகாமைத்துவ உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கும் அநுராதபுரம் மாவட்டச் செயலாளரை இதன் தத்துவம் பெற்ற அதிகாரியாக நியமிப்பதற்குமாக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |