2015-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2015 சிறுபோகத்தின் போது நெல் செய்கைக்காக மானிய உர விநியோகம் - நெற் செய்கைக்காக வழங்கப்படும் உரமானியம் உயர் அறுவடையினைப் பெற்றுக் கொள்வதற்கு காரணமாய் அமைந்துள்ளது. இதற்கமைவாக 2015 சிறுபோகத்தில் நெற்செய்கை பண்ணுவதற்கு எதிர்பார்க்கப் பட்டுள்ள மொத்த நிலப் பிரதேசம் 540,000 ஹெக்டயர் ஆவதோடு இதற்காக இடப்படவேண்டிய மொத்த உரத்தின் அளவு 162,733 மெற்றிக் தொன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உரமானியத் திட்டத்தை 2015 சிறுபோகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் உரத்தின் தரத்தை உறுதி செய்து குறித்த அளவினை கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |