• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சலுகை விலையின் கீழ் வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக மரக்கறி கன்றுகளையும் நூற்றுக்கு ஐம்பது வீதமென்னும் மானிய அடிப்படையில் சிறு அளவிலான விவசாய காணிகளுக்கு மரக்கறி விதைகளையும் வழங்குவதன் மூலம் குறைவாக கிடைக்கப்பெறும் காலங்களில் மரக்கறி வகைகளைப் பயிரிடல்
- மரக்கறி விலை அதிகரிப்பினைக் கட்டுப்படுத்தி ஆண்டு முழுவதும் விதித்துரைக்கப்பட்ட விலையினைப் பேணுவதற்கு இயலுமாகும் வகையில் வீட்டுத் தோட்டத்தை பிரபல்யப்படுத்துவதற்காக மரக்கறி விதைகள் விநியோகிப்பதற்குப் பதிலாக இலகுவாக பயிர் செய்வதற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட மரக்கறிக் கன்று ஒன்றை 25/- ரூபாவைக் கொண்ட சலுகை விலையொன்றை அறவிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் வர்த்தக பயிர்ச்செய்கையாக 1/2 ஏக்கர் வரையிலான காணிகளில் மரக்கறி செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களுடைய விதைத் தேவைகள் சம்பந்தமாக சலுகையினை ஏற்பாடு செய்வதற்குமாக நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.