• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுர்த்தி நிவாரணங்களை அதிகரித்தல்

- 100 நாட்களுக்குள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் துரித நிவாரண நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சமுர்த்தி நிவாரணத்தை ஆகக்கூடுதலாக 200 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதோடு, இதனை 2015 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு நிதி அமைச்சரினால் 2015 இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் மாண்புமிகு சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.