2015-02-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2014 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வௌ்ளப்பெருக்குக் காரணமாக நீர்ப்பாசன வலையமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தை சீர் செய்வதற்காக துரித நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துதல் - ஏற்கனவே 2014 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வௌ்ளப்பெருக்குக் காரணமாக சிறிய மற்றும் பாரிய நீர்ப்பாசன வலையமைப்புகளுக்கு நிகழ்ந்த சேதங்கள் மதிப்பிடப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக பாரிய நீர்பாசனத் திட்டங்களுக்குரியதாக 1,348 சேதமடைந்த இடங்கள் 13 மாவட்டங்களிலும் 2,132 சேதமடைந்த சிறு நீர்பாசனங்கள் 15 மாவட்டங்களிலும் இனங்காணப்பட்டுள்ளன. 2015 சிறுபோகம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சேதமடைந்த நீர்பாசன வலையமைப்புகளை சீர் செய்வதற்காக நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |