• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயம்

- இந்த மாதம் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் தாம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுக்கு வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயமொன்றில் ஈடுபட்டதாகவும் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் இராஜங்க செயலாளர் திரு.எவ்.கெரி அவர்களுடனும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கான நிரந்தர பிரதிநிதியான திருமதி சமந்தா பவர் அவர்களுடனும் அந்நாட்டின் உயர்மட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் பலருடனும் இருதரப்பு கலந்துரையாடல்களைச் செய்வதற்கு தமக்கு வாய்ப்பு கிடைத்ததெனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மங்கள சமரவீர அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. முக்கியமாக இராஜங்க செயலாளர் திரு.எவ்.கெரி அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது புதிய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகளை மெச்சுவதாகவும் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் தாம் மிகத் தெளிவான நிலையைக் கொண்டுள்ளாரெனவும் அவர் தெரிவித்ததாக அமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதேபோன்று தனது விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் நாயகம் பான் கீ - மூன் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் இடையிலான 60 வருடகால நட்புறவு தொடர்பில் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் அமைச்சரானவர் அமைச்சரவைக்கு அறிவித்தார். அத்துடன், வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் இலங்கை சம்பந்தமாக முன்வைக்கப்படவிருந்த அறிக்கையை பிற்போடுமாறு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் செய்த எழுத்துமூலக் கோரிக்கையை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு குறித்த அறிக்கையின் சமர்ப்பித்தலை ஆறு (06) மாதத்தால் பிற்போடுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததெனவும் அமைச்சரினால் மேலும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.