- அமைச்சரவையின் தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டினை இலகுவாக்குவதற்காக அந்தந்த விடயதுறைகளுக்கான பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து பொருத்தமான சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்குப் பின்வரும் ஐந்து (05) அமைச்சரவை உபகுழுக்களைத் தாபிப்பதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
(அ) தேசிய கொள்கை பற்றிய அமைச்சரவை உபகுழு;
(ஆ) பொருளாதார கொள்கை பற்றிய அமைச்சரவை உபகுழு;
(இ) தாபன பணிகள் பற்றிய அமைச்சரவை உபகுழு;
(ஈ) சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழு; அத்துடன்
(உ) கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவைக் குழு.
அரசியலமைப்பின் 55(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம் திணைக்களத் தலைவர்களின் நியமனம் அமைச்சரவைக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. ஆதலால், மிகப் பொருத்தமானவர்களை இந்த பதவிகளுக்கு தெரிவுசெய்யக்கூடிய விதத்தில் சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு தாபன பணிகள் பற்றிய அமைச்சரவை உபகுழுவுக்கு கையளிக்கப்படுகின்றது. இதன்போது அமைச்சரவை செயலாளரினால் உத்தேச உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினதும் இயைபுள்ள நிருவாக அதிகாரபீடங்களினதும் கருத்துக்களை அறிந்து தாபன பணிகள் பற்றிய அமைச்சரவை உபகுழுவுக்கு அறிக்கையிட வேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.