• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனிக் கைத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஏனைய செலவினங்களுக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குதல்

- கந்தளாய் சீனிக் கைத்தொழிற்சாலைக்குச் சொந்தமான சொத்துக்களின் பாதுகாப்பு / பராமரிப்பு உட்பட ஏனைய அத்தியாவசியப் பணிகளுக்காக இந்த நிறுவனத்தில் 39 ஊழியர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய சம்பளம் உட்பட ஏனைய படிகளை வழங்கும் பொருட்டு நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குவதற்காக காணி அமைச்சர் மாண்புமிகு எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.