2015-02-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை தரைப்படையில் நிகழ்ந்ததாக கருதப்படும் அரசியல் பழிவாங்கல் பற்றி புலனாய்வு செய்வதற்கான குழு - அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் தண்டனைகளுக்கு ஆளானவர்களுக்கு இதன் காரணமாக இல்லாமற்போன பதவிகள் மற்றும் உரிமைகளை மீண்டும் வழங்குவதற்கு அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் உறுதியளிக்கப் பட்டிருந்தது. இதற்கமைவாக, முப்படைகளிலும் 2010 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளானவர்களின் முறைப்பாடுகளை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்து நிவாரணம் வழங்குவதற்காக உரிய சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |