2015-02-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறுவர் (நீதிமுறை பாதுகாப்பு) பற்றிய சட்டமூலம் - 1945 ஆம் ஆண்டு இறுதியாக திருத்தியமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் இளைஞர் தொடர்பிலான கட்டளைச் சட்டம் கடந்த 70 வருட காலப்பகுதிக்குள் எவ்வித மாற்றத்திற்கும் ஆளாகவில்லை என்பதனால் வழக்கு நடவடிக்கைகளை வினைத்திறனுடனும் துரிதமாகவும் விசாரணை செய்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கடினமாய் உள்ளது. அதேபோன்று நீதிமுறை நடவடிக்கை சம்பந்தமாக உள்நாட்டு நீதமன்ற முறைமைக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் நிகழ்ந்த மாற்றங்களைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு நடைமுறையிலுள்ள சட்டங்களை மாற்றவேண்டிய தேவை எழுந்துள்ளது. அத்துடன், இலங்கையில் சிறுவர் உரிமை பற்றிய ஐக்கிய நாடுகளின் சமவாயத்தை செயல்வலுவாக்கம் செய்யப்பட்டவுடன் சிறுவர் பாதுகாப்பு உட்பட சிறுவர் நீதிமுறை முறைமையின் பாதுகாப்புச் சம்பந்தமாக நிலவும் குறைபாடுகளுக்கு துரித மற்றும் நீண்டகால தீர்வாக நடைமுறையிலுள்ள சட்டத்தைத் திருத்துவது அத்தியாவசியமானதாகும். |