2015-02-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் சுகாதார சமுதாய நிலை புள்ளிவிபர ஆய்வு - 2014/2015 - சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்காக கொள்கைரீதியிலான தீர்மானங்களை எடுப்பதற்கு நடைமுறைத் தகவல்களைத் திரட்டுவது தேவையான தென்பதோடு, அதற்கு இலங்கையில் சுகாதார சமுதாய நிலை புள்ளிவிபர ஆய்வு - 2014/2015 இந்த ஆண்டில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக இத்தகைய ஆய்வொன்று 2006/2007 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டதோடு, இந்த ஆண்டில் நடாத்தப்படும் ஆய்வுக்குரிய பணிகள் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சும் தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களமும் இணைந்து மேற்கொள்கின்றன. இந்த ஆய்வுக்கு 201 மில்லியன் செலவாகுமென மதிப்பிடப் பட்டுள்ளது. மேற்போந்த ஆய்வினை மேற்கொள்வதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |