• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள சுங்க பணிகள் பற்றிய பரஸ்பர உடன்படிக்கை

- பிரேரரிக்கப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் மூலம் சுங்கப் பணிகள் சம்பந்தமாக இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பினை பலப்படுத்துதல், மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் அதேபோன்று பரஸ்பர புரிந்துணர்வு உட்பட தொடர்பாடலை பலப்படுத்தவும்கூட எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, இருநாடுகளுக்கும் இடையில் விரிவான வர்த்தக வசதிகளுக்கும் சுங்க நடவடிக்கைகளின் போது புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும்கூட எதிர்பார்க்கப்படுகின்றது. பிரேரிக்கப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையை அதிமேதகைய சனாதிபதி அவர்களின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.