• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 பெப்பரவரி நடுப்பகுதியில் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் இந்திய விஜயத்தின் போது நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் விடயநோக்கெல்லைக்குள் வரும் விடயங்கள் சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் பொருட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்

- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் 2015 பெப்பரவரி நடுப்பகுதியில் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் உத்தியோபூர்வ விஜயத்தின் போது இருதரப்பு ஒத்துழைப்பு சார்பில் நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் விடயநோக்கெல்லைக்குள் வரும் பல்வேறுபட்டு விடயங்கள் சம்பந்தமாக இந்தியாவின் இயைபுள்ள நிறுவனங்களுடன் கலந்துரையாடி உடன்பாட்டுக்கு வருவதற்கும் 2015 மார்ச் மாதத்தில் அதிமேதகைய இந்திய பிரதம அமைச்சரின் உத்தியோபூர்வ விஜயத்தின் போது குறித்த துறைகளுக்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும் நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹாஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.