2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இந்திய குடியரசுக்குமிடையில் நாலந்தா பல்கலைக்கழகத்தை தாபிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - பிரேரிக்கப்பட்டுள்ள மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் நாலந்தா பல்கலைக்கழகத்தை தாபிக்கும் முக்கியத்துவம் கண்டறியப்பட்டதோடு, இது இரு நாடுகளுக்கும் இடையிலான மாணவ சமூகத்தினருக்கு இடையிலான உறவுகளை மேலும் வளர்க்கும் வழியொன்றாகவும்கூட முக்கியமானதாகும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உயர்கல்வித்துறையின் பரஸ்பர ஒத்துழைப்பை பலப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கும் இந்தியக் குடியரசின் கல்வி அமைச்சுக்கும் இடையில் பிரேரிக்கப்பட்டுள்ள மேற்போந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹாஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |