2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களைக் கொண்டுள்ளவர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கை - இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் செல்லுபடியாகும் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களைக் கொண்டுள்ளவர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பது சம்பந்தமாக மேற்போந்த உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்காக மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமை மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |