• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுநீரக நோய் தொடர்ந்தும் அதிகரிப்பதை தடுத்தலும் ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்குமான நலனோம்பலும்

- தேசிய அனர்த்தமொன்றாக மாறியுள்ள சிறுநீரக நோய் அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களினதும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களினதும் நலனோம்புகையின் பொருட்டும் இந்த விடயத்திற்குரியதாக இதற்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ள கல்விமான்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பிரேரிப்புகளை அந்தந்த அமைச்சுக்களினால் துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் மாண்புமிகு பிரதம அமைச்சரையும் கொண்ட அமைச்சர்கள் உபகுழுவொன்றை நியமிப்பதற்கும் இந்தக் குழுவுக்கு ஒத்தாசை நல்குவதற்காக சனாதிபதி செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழ் சிரேட்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்குமாக சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.