• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுனங்களில் நிகழ்ந்துள்ளதாகக் கருதப்படும் முறைகேடுகள், ஊழல் அல்லது அதிகாரத்தினை முறைகேடாக பயன்படுத்துதல் தொடர்பில் புலனாய்வு செய்வதற்கும் அறிக்கை யிடுவதற்குமான குழுவொன்றை நியமித்தல்

- உணவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் சில தரப்பினர்களினால் செய்துள்ளதாகக் கூறப்படும் முறைக்கேடுகள் ஊழல் அல்லது அதிகாரத்தினை முறைகேடாக பயன்படுத்துதல் தொடர்பில் புலனாய்வு செய்வதற்கும் உரிய தரப்பினர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை ஆரம்பிப்பதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி பரிசீலனை செய்து அறிக்கையிடுவதற்காகவும் குழுவொன்றை நியமிப்பதற்கு உணவு பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொண்டர் அமைப்புகள் பல அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நிறுவனங்களில் நிகழ்ந்துள்ள ஊழல் மற்றும் மோசடிகள் பற்றி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் போது தன்னார்வ அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளமையினால் இந்த குழுவுக்கு அத்தகைய தொழில்சார்பாளர்களை தன்னார்வ அடிப்படையில் பங்குபற்றச் செய்வதற்கான சாத்தியம் பற்றி ஆராய வேண்டுமெனவும்கூடத் தீர்மானிக்கப்பட்டது.