2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ரணவிரு உபகார - வெற்றி அணிவகுப்பு - எல்ரீரீஈ பயங்கரவாத அமைப்பின் யுத்தரீதியிலான தோல்வியை நினைவுகூரும் முகமாக முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணி தெரிவித்த பங்களிப்பை மெச்சுவதற்கும் 30 வருட காலங்களுக்கு மேலாக யுத்தக் காலப்பகுதியில் உயிர்நீத்த படைக்கலம் தாங்கிய சேவைகளின் உறுப்பினர்கள் அனைவரையும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களையும் நினைவுகூரும் முகமாக 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் திகதி அல்லது அதற்குக்கிட்டிய திகதியொன்றில் நடாத்தப்படும் வெற்றி அணிவகுப்பை இந்த ஆண்டில் ரணவிரு உபகார விழாவொன்றாக காலி நகரத்தில் நடாத்துவது பொருத்தமென பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |