• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊழல் எதிர்ப்பு குழுவுக்கான செயலகமொன்றைத் தாபித்தலும் பொருத்தமான பதவியணியொன்றை ஆட்சேர்ப்புச் செய்தலும்

- கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிகழ்ந்த பாரிய அளவிலான ஊழல் மோசடி நடவடிக்கைகளைப் புலனாய்வு செய்வதற்கும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி சிபாரிசு செய்வதற்காகவும் நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழுவுக்கான செயலகமொன்றைத் தாபிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, வௌ்ளைப்பணமாக்கல் உட்பட சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்குரிய குற்றவியல் புலனாய்வு பிரிவொன்றை (Financial Crimes Investigation Division) பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் தாபிப்பதற்கும்கூட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பிலான அறிவித்தல் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 55 ஆம் பிரிவின் கீழ் பொலிஸ்மா அதிபரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும்.