• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுதந்திரதின விழாவின் போது வாசிக்கப்படுவதற்காக சமர்ப்பிக்கப்படும் சமாதான பிரகடனத்துக்கான பிரேரிப்பு

- கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் ( ) அறிக்கையில் 9.284 ஆம் 9.285 ஆம் அத்தியாயங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நீண்டகாலமாக நாட்டில் நிலவிய மோதல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்துவதற்கும் அத்தகைய மோதல் நிலைமைகள் மீள ஏற்படாதவாறு கூட்டாக அர்ப்பணிப்பதாக உறுதியுரைவதற்கும் 2015 பெப்ரவரி 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள தேசிய சுதந்திரதின விழாவின் போது சமாதானத்திற்கான பிரகடனத்தை செய்யும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களினாலும் பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அஜித் பி.பெரேரா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.