2015-01-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
67 ஆவது சுதந்திரதின விழாவுக்கு ஒருங்கிணைவாக நடாத்தப்படும் கலாசார நிகழ்ச்சிகள் - சகல சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் "தேசிய ஒற்றுமை" என்னும் தொனிப்பொருளின் கீழ் பல்வேறுபட்ட கலாசார அம்சங்களைக் கொண்ட கலாசார நிகழ்ச்சியொன்று 67 ஆவது சுதந்திரதின விழாவுக்கு ஒருங்கிணைவாக பெப்ரவரி 04 ஆம் திகதியன்று மாலை வேளையில் கொழும்பு நகர மண்டபத்திற்கு எதிரே நடாத்துவதற்கு கொழும்பு நகர பிதாவினால் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |