2015-01-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க களஞ்சியசாலைகளில் கையிருப்பிலுள்ள இறக்குமதி செய்யப்ப்ட அரிசி - கடந்தகாலங்களில் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டதும் தற்போது களஞ்சியசாலைகளில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதுமான அரிசி தொகையானது மனிதப் பாவனைக்கு ஏற்றதா என்பது பற்றி பரிசோதனை செய்து 2014 / 2015 பெரும்போக அறுவடை சந்தைக்கு வருவதற்கு முன்னர் இவ்வாறு களஞ்சியப்படுத்தியுள்ள அரசி தொகையை சந்தைக்கு விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்புப் பற்றிய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. |