2015-01-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நியாயமானதும் பக்கசார்ப்பற்ற விதத்திலும் சனாதிபதித் தேர்தலை நடாத்தியமை - நியாயமானதும் பக்கசார்ப்பற்ற விதத்திலும் சனாதிபதித் தேர்தலை நடாத்தியமை சம்பந்தமாக தேர்தல்கள் ஆணையாளர், மாவட்ட செயலாளர்கள் உட்பட தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட சகல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸ் திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களுக்கும் பிரச்சினை உருவாகக்கூடியதாகவிருந்த பிரதேசங்களில் பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் விசேட பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கும் அமைச்சரவையின் நன்றியறிதலை தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. |