• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் “சிலோன் ரீ எக்ஸ்போ 2015” ஐ நடாத்துதல்

- பெருந்தோட்டத் தொழில் அமைச்சும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து முதலில் “சிலோன் ரீ எக்ஸ்போ 2015” கண்காட்சியையும் மாநாட்டையும் 2015 நவெம்பர் 06 தொடக்கம் 08 வரை கொழும்பு பண்டரநாயக்க ஞாபகார்த்த சருவதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியின் மூலம் சருவதேச கொள்வனவாளர்கள், சிறந்த விற்பனை வலையமைப்புக்கள், மொத்த விற்பனையாளர்கள் பெறுமதி சேர்க்கப்பட் டோர்களின் அபிவிருத்தி, நிறுவனங்களின் சங்கம் போன்றவற்றை கவர்ந்திழுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் இலங்கை தேயிலைக்கு உலகம்பூராவும் போதுமான அளவு விளம்பரங்கள் கிடைக்கப் பெறுவதோடு நாட்டுக்கும் வருமானங்கள் கிடைக்கும் இதற்குரியதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.