2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
படல்கம பால் பதனிடல் நிலையத்தை தாபித்தல் - பால் பதனிடல் தொழிலில் ஈடுபடுகின்ற அரசாங்க தொழில்முயற்சியாளர்களான வரையறுக்கப்பட்ட மில்க்கோ தனியார் கம்பனிக்குரிய நாராஹேன்பிட்டி, திகன, அம்பேவெல மற்றும் பொலன்னறுவ போன்ற பிரதேசங்களில் பிரதான நான்கு பால் பதனிடும் நிலையங்கள் உள்ளன. கூடுதல் நகர மயப்படுத்தப்பட்ட பிரதேசமான நாராஹேன்பிட்டியிலுள்ள மில்க்கோ கைத்தொழில் நிலையத்தை கம்பஹா மாவட்டத்தின் படல்கமவில் இடமாற்றுவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. படல்கம புதிய கைத்தொழில் நிலையத்தில் தொற்றுநீக்கப்பட்ட பால், யோக்கட், ஐஸ்கிறீம், பட்டர் மற்றும் சீஸ் போன்றவற்றைத் தயாரிப்பதற்குத் தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏனைய வசதிகளையும் கொண்ட பால் பதனிடும் பொறித் தொகுதியொன்றை தாபிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நிதியளிப்பதற்கும் அது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |