• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014‑10‑29 ஆம் திகதியன்று கொஸ்லந்தை மீரியபெத்தயில் நிகழ்ந்த மண்சரிவு அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக வீடுகளை நிருமாணித்தல்

- 2014‑10‑29 ஆம் திகதியன்று கொஸ்லந்தை மீரியபெத்தயில் நிகழ்ந்த மண்சரிவு அனர்த்தம் காரணமாக பாதிப்புக்கு உள்ளான 75 குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணிப்பதற்கு மஸ்கெலிய பெருந்தோட்டக் கம்பனிக்குரிய அம்பிட்டிகந்த மெல்வன் பகுதியில் இரண்டு (02) ஏக்கர் அளவிலான காணித்துண்டொன்று குறித்தொதுக்கப் பட்டுள்ளதுடன், இதில் வீடுகளை நிருமாணிப்பதற்கு பொருத்தமான காணியென தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த நிருமாணிப்பு நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் வேலையை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா 2014‑12‑18 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளது. கால்நடைவளர்ப்பு, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.