2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விக்ரோறியா நீர்த்தேக்க அணையின் புனரமைப்பு வேலைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல் - அணை பாதுகாப்பு மற்றும் நீர் வழங்கல் திட்டமிடல் கருத்திட்டத்தின் செலவினத்தை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி நிறுவனத்திடமிருந்து (IDA) கடன் தொகையொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இந் நிதியின் ஒருபகுதியை விக்ரோறியா நீர்த்தேக்க அணையின் புனரமைப்பு வேலைகளுக்காக பயன்படுத்துவதற்கும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரமும், மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |