2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யப்பான் சருவதேச ஒத்துழைப்பிற்கான நிறுவனத்தினால் நிதியளிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் பிரதான பாலங்களை நிருமாணிக்கும் கருத்திட்டம் - தேசிய வீதி வலையமைப்பின் பிரதான பாலங்களை நிருமாணிக்கும் செலவை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு யப்பான் சருவதேச ஒத்துழைப்பிற்கான நிறுவனத்திடமிருந்து (JICA) 12,381 மில்லியன் யப்பான் யென் கடனாக இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ளது. மேல், தெற்கு, வடமேல், வடக்கு மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பில் அமைந்துள்ள குறுகிய அல்லது சேதத்திற்குள்ளான நிலையிலுள்ள 37 பாலங்களை இந்தக் கருத்திட்டத்திற்காக இனங்காணப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த பொதி (01) இல் 10 பாலங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம், ஒப்பந்த பொதி (01) ற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |